கோவையில் பணம் தரமறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கி பணம் பறிப்பு - 3 பேர் கைது

கோவை செல்வபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்ற மூன்று பேர் கைது.



கோவை: பேரூர் சாலையில் உள்ள டாஸ்மார்க் அருகே குடிக்கப் பணம் தாராத ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). ஜேசிபி ஆப்ரேட்டரான இவர் நேற்று பேரூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது அவருக்குத் தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சா என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். மேலும் ஜான்சா மதுகுடிக்க அருண்குமாரிடம் பணம் கேட்டதாகத் தெரிகிறது.

ஆனால் அருண்குமார் பணம் கொடுக்க மறுத்ததால் அவருடன் வந்த இஸ்மாயில் (28) மற்றும் முஸாமில் (32) இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து ஜான்சா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அருண்குமார் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார், ஜான்சா (37), இஸ்மாயில் (28), முசாமில் (32) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...