கோவையில் பணம் தரமறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கி பணம் பறிப்பு - 3 பேர் கைது

கோவை செல்வபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த ஜேசிபி ஆப்ரேட்டரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்ற மூன்று பேர் கைது.



கோவை: பேரூர் சாலையில் உள்ள டாஸ்மார்க் அருகே குடிக்கப் பணம் தாராத ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). ஜேசிபி ஆப்ரேட்டரான இவர் நேற்று பேரூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது அவருக்குத் தெரிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சா என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். மேலும் ஜான்சா மதுகுடிக்க அருண்குமாரிடம் பணம் கேட்டதாகத் தெரிகிறது.

ஆனால் அருண்குமார் பணம் கொடுக்க மறுத்ததால் அவருடன் வந்த இஸ்மாயில் (28) மற்றும் முஸாமில் (32) இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து ஜான்சா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அருண்குமார் அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார், ஜான்சா (37), இஸ்மாயில் (28), முசாமில் (32) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...