பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி

பல்லடத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து டிராக்டர் பேரணி. நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கோரி விவசாயிகள் வலியுறுத்தல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர்.



ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்லடத்தில் ராயர்பாளையத்தில் இந்த டிராக்டர் பேரணி தொடங்கியது.



அங்கிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக சென்றனர்.



அப்போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் கொடுக்க வேண்டும், எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விவசாய பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது.



டிராக்டர் பேரணியில், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...