'பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிடில் கலாச்சாரம், ஆன்மீகத்தை பாதுகாக்க முடியாது..!' - கோவை ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு

பொருளாதாரத்தில்‌ பலமாக இல்லாவிட்டால்‌ நம்‌ நாட்டில்‌ இருக்கும்‌ கலாச்சாரம்‌, ஆன்மீகம்‌ என எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது என்று குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு.


கோவை: கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.



கோவை ஈஷா மையத்தில் 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது,



தேசத்தில்‌ வாழும்‌ நாம்‌ ஜாதி, மதம்‌, மொழி, இனம்‌, உணவுப் பழக்கம்‌, கலாச்சாரம்‌ எனப் பல விதங்களில்‌ வேறுபட்டு உள்ளோம்‌. நம்மிடம்‌ எவ்வளவு வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ நாம்‌ அனைவரும்‌ பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்‌.

சுதந்திரத்திற்கு முன்பு நம்‌ தேசத்தை 600-க்கும்‌ மேற்பட்ட குறு நில அரசர்கள்‌ ஆட்சி செய்து வந்தனர்‌. இருப்பினும்‌, வெளியிலிருந்து வந்தவர்கள்‌ அனைவரும்‌ நம்மை இந்துஸ்தான்‌ அல்லது பாரதம்‌ என்று ஒற்றை பெயர்‌ வைத்தே அழைத்தனர்‌.

நம்மிடம்‌ இருக்கும்‌ இந்த பன்மைத்துவத்தையும்‌, வேறுபாடுகளையும்‌ பயன்படுத்தி நமக்குள்‌ பிரிவினையை உருவாக்கும்‌ செயல்கள்‌ கடந்த 600 முதல்‌ 700 ஆண்டுகளில்‌ மிகவும்‌ தீவிரமாக நடந்துள்ளன. நம்‌ தேசத்தின்‌ மீது படையெடுத்தவர்களும்‌, ஆக்கிரமித்தவர்களும்‌ இதைப் பல வழிகளில்‌ மிகவும்‌ திட்டமிட்டுச் செய்துள்ளனர்‌.



குறிப்பாக, நம்‌ தேசத்தின்‌ பொருளாதார முதுகெலும்பைத் தகர்ப்பதற்கும்‌ அவர்கள்‌ செயல்‌ செய்துள்ளார்கள்‌. 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில்‌ பொருளாதாரத்தில்‌ வளமான தேசமாக நம்‌ பாரத தேசம்‌ இருந்தது. அந்த நிலையை மீண்டும்‌ அடையும்‌ முயற்சியில்‌ நாம்‌ தற்போது உள்ளோம்‌.

பொருளாதார பலம்‌ இல்லாமல்‌ கலாச்சாரம்‌, ஆன்மீக விழுமியங்கள்‌ என நாட்டில்‌ உள்ள எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது. மேலும்‌, நம்மிடம்‌ இருக்கும்‌ பல விதமான வேறுபாடுகளைக் கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள்‌ கண்டறிந்து அதை மேலும்‌ பலப்படுத்த வேண்டும்,‌ என்றார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...