கிணத்துக்கடவு அருகே ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் - இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகத்திற்காக சாலையோரத்தில் டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன.

அப்போது, அப்பகுதியில் குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள், டியூப் லைட்டுகளை உடைத்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜன் என்பவர் அந்த இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் ராஜன்மீது தாக்குதல் நடத்தினார். இதில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார்,உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட பெரியார் நகர் பகுதி சேர்ந்த ராஜ்குமார்(வயது 22) சுலைமான்(வயது 21) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...