உடுமலை பகுதியில் மூடுபனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை நிலவிய அதிகப்படியான மூடுபனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: இயற்கையின் படைப்பில் முன்பனிகாலம், பின்பனிகாலம் இளவேனிற்காலம், கோடைகாலம், கார் காலம், இலையுதிர் காலம் உள்ளிட்ட பல்வேறு பருவங்கள் சுழற்சிமுறையில் வந்து செல்கின்றன.

ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு குணத்தை கொண்டிருந்தாலும் உடலில் ஏற்படுகின்ற வாயு, பித்தம், கபம் உள்ளிட்டவற்றை சீரமைப்பதில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இதனால், நோய் நொடியில்லாமல் உயிர் வாழ்வதற்கு உண்டான சத்துக்கள் இயற்கையாவே உடலுக்கு கிடைத்து விடுகிறது.

சூரியன் வெப்பத்தை அளிப்பதும், சந்திரன் குழுமையை தருவதும் இயற்கையின் நியதியாகும். இயற்கை நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்றாடம் தொய்வில்லாமல் தன்னலமின்றி செய்து வருகிறது. பருவத்தே பெய்யும் மழையும், மாசில்லா காற்றும், பாரம்பரியமிக்க உணவுகளும் உடலுக்கு காலங்காலமாக ஆரோக்கியத்தை அளித்து வருகிறது.

கடும் வெயிலுக்கும், பசிக்கும் தாகத்திற்கும் தாக்குப்பிடிக்கும் நாம் சிறுமழை மற்றும் பனித்துளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகளில் முடங்கி விடுகிறோம்.

பருவத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் கற்றுக்கொண்டால் நோய்நொடி இல்லாத வாழ்வை பெறலாம் என்பதே பருவங்கள் நமக்கு உணர்த்தும் மொழியாகும்.



தை மாதமான தற்போது பின்பனிக்காலம் தொடங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான உரல்பட்டி, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பகுதியில் இன்று காலை வழக்கத்திற்கு அதிகமாக பனிப்பொழிவு நிலவியது.



இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கிச் சென்றனர். மூடுபனியுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், மழைபோல் கொட்டிய மூடுபனியை உடுமலை இளைஞர்கள் வீடியோ, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்தும் மகிழ்ந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...