குற்றவாளிகளை தட்டி தூக்கும் டைகருக்கு பிறந்தநாள் - முதுமலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காக வளர்க்கப்பட்டு வரும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


நீலகிரி: முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் வன குற்றங்களை கண்டுபிடிக்கும் விதமாக முதுமலையில் பிரேத்யேக பயிற்சி பெற்ற டைகர் எனப்படும் மோப்பநாய் வளர்க்கப்பட்டு வருகிறது.



இந்த நாய் இதுவரை 13 வன குற்றங்களை கண்டுபிடித்துள்ளது.



பிறந்து ஆறு மாத குட்டியாக முதுமலை கொண்டுவரப்பட்ட இந்த நாய்க்கு நேற்று 2-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் வித்யா தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி அந்த மோப்ப நாய்க்கு ஊட்டி மகிழ்ந்தனர்.



அப்போது சுற்றி இருந்த வனத்துறையினர் "ஹாப்பி பர்த்டே டைகர்" என கைத்தட்டி பாட்டுப்பாடி வாழ்த்துத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...