குற்றவாளிகளை தட்டி தூக்கும் டைகருக்கு பிறந்தநாள் - முதுமலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காக வளர்க்கப்பட்டு வரும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


நீலகிரி: முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் வன குற்றங்களை கண்டுபிடிக்கும் விதமாக முதுமலையில் பிரேத்யேக பயிற்சி பெற்ற டைகர் எனப்படும் மோப்பநாய் வளர்க்கப்பட்டு வருகிறது.



இந்த நாய் இதுவரை 13 வன குற்றங்களை கண்டுபிடித்துள்ளது.



பிறந்து ஆறு மாத குட்டியாக முதுமலை கொண்டுவரப்பட்ட இந்த நாய்க்கு நேற்று 2-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் வித்யா தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி அந்த மோப்ப நாய்க்கு ஊட்டி மகிழ்ந்தனர்.



அப்போது சுற்றி இருந்த வனத்துறையினர் "ஹாப்பி பர்த்டே டைகர்" என கைத்தட்டி பாட்டுப்பாடி வாழ்த்துத் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...