தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் நோய்த்தடுப்புக்கான மருந்துக்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கான அனைத்து தடுப்பு மருந்துக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.



கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான நோய்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். பன்றிக்காய்ச்சலுக்கான டாமிபுளூ மாத்திரைகள் போதுமான அளவில் அரசு மருத்துவமனையிலும், சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 



மேலும் மக்களிடையே நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு தொடர்ந்து நடத்தி வருவதாகவும் சோப் மூலம் கைகளை நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 12 முறைகளாக கழுவ வேண்டும் என்பதை மாணவர்களிடம் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ரூபெல்லா மற்றும் தட்டமைக்கான தடுப்பூசிகள் போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...