'நிதி மோசடி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்..!' - பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுரை

கோவையில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுறுத்தல்.


கோவை: கோவையில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை சாய்பாபாகாலனி ராமலிங்கம் நகர், பகுதியில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி, இதுவரை 50,000-த்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி மோசடி செய்ததாக கோவைப் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவை அணுகித் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்து கொள்ளும் பட்சத்தில் விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...