குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்குக் கத்திக்குத்து!

குன்னூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்குக் கத்தி குத்து. குன்னூர் அரசு மருத்துவமனையில் மாணவருக்கு சிகிச்சை.



நீலகிரி: தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு உதவி பெற்று வரும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவர் கத்தியால் மற்றொரு மாணவரைக் குத்தியுள்ளார்.



இதில் காயமடைந்த மாணவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



அங்கு அவருக்கு முதுகு பகுதியில் ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அப்பர் குன்னூர் காவல்துறையினர் கத்தியால் தாக்கிய மாணவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னூரில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...