கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு - சாலையைக் கடக்க முயன்றபோது விபத்து

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: தாமரைகுளத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதால், சம்பவ இடத்தில் பலியானார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி கமலவேணி இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டிக்காபாளையத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து வேகமாக வந்த கார் கமலவேணி மீது மோதியது. பலத்த காயமடைந்த கமலவேணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் கமலவேணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த விசாகரத்தினம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...