உதகை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா - பாரம்பரிய நடனமாடிய தோடர்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பொள்சி எனும் அழைக்கப்படும் கோவில் திருவிழாவில் தோடர் இன ஆண்கள் மட்டுமே பங்கேற்பு. இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை.



நீலகிரி: உதகை அருகே 70 கிராம தோடர் இன ஆண்கள் பங்கேற்ற திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன ஆதிவாசி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மந்து என்று அழைக்கப்படும் 70 கிராமங்களில் சுமார் 2000 தோடர் இன மக்கள் உள்ளனர். இந்த மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் வினோதமானதாகவே உள்ளது.

இந்த நிலையில் உதகை அருகே உள்ள தாரநாடு மந்து தோடர் இன மக்களின் கோவில் ஒன்று சோலூர் அருகே அமைந்துள்ளது.



இக்கோவில் 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டது. அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்குச் சென்று அவுல் என்ற புற்களையும், பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதுபிக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா நடைபெற்றது. தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைபடி கோவிலின் முன்பு ஒன்று கூடிய மண்டியிட்டு வணங்கினர்.



இதனையடுத்து கோவிலின் வாயிலின் முன்புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.



இதனையடுத்து அருகில் உள்ள புல்வெளியில் ஒன்று திரண்ட தோடர் இன ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளைக் கோர்த்து வட்டமாக நின்று தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



பெண்களுக்கு இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...