'ஜன.31க்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' - தாராபுரம் கோட்ட மின்சார வாரியம் அறிவிப்பு!

பொதுமக்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலன் அறிவித்துள்ளார்.


தாராபுரம்: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வீடு, கைத்தறி, பவர் லூம், குடிசை மின் இணைப்புகளின், மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயமாக இணைக்க வேண்டும்.

தாராபுரம் கோட்டத்தில் 20 மின்சார வாரிய பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்தந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம் ஏற்படுத்தி ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆதார் எண் இணைக்கப்படாத மின் இணைப்புகளுக்கு மின் நுகர்வோருடைய வீட்டிற்கு நேரில் சென்று ஆதார் எண்ணை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

அதே சமயம் அனைத்து மின்நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண் மற்ற விவரங்களை பணியாளர்களிடம் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...