சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு - கோவை மாநகர போலீசார் பிரச்சாரம்

சைபர் கிரைம் மோசடிகள் குறித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சைபர் கிரைம் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சைபர் கிரைம் மோசடிகள் குறித்து மக்களிடையே கோவை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண்ணை பெற்று பணத்தை திருடுதல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

அதேபோல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நமது சொந்த தகவல்களை திருடி அதன் மூலம் மிரட்டி பணம் பறித்தல், மொபைல் ஆப் மூலம் கடன் தருவதாக கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நோட்டீஸ் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இம்மாதிரி இணையதள மோசடி மூலம் பணத்தை பொதுமக்கள் இழந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசை அணுகினால் இழந்த பணத்தை மீட்க முடியும்.

எனவே இணையதளத்தை அதிகளவு பயன்படுத்தும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...