கோவையில் 19 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குருப் 3 தேர்வு - 57.73 சதவீதம் பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி - குரூப் 3 தேர்வு கோவையில் 19 மையங்களில் நடைபெற்றது. இதில் 57.73 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.



கோவை: கோவையில் 19 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் -3 தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாட்டின் அரசாங்க காலி பணியிடங்களுக்கு டி என் பி எஸ் சி மூலமாக தேர்வு நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு இன்று நடைபெற்றது.



தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் சென்றனர். 9.30 மணிக்கு வினாத்தாள்கள் தரப்பட்டு தேர்வு எழுத ஆரம்பித்தனர்.



நண்பகல் 12:30 மணி வரை தேர்வு நடந்த நிலையில், 12.45 மணிக்கு கிராஸ் செக்கிங் முடித்து தேர்வர்கள் மையங்களில் இருந்து வெளியே வந்தனர்.

தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்த தேர்வர்கள், குரூப்-3 தேர்வை சிறப்பாக எழுதியுள்ளோம். குறிப்பாக தமிழ், பொருளாதாரம், பொதுஅறிவு உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் இலகுவாக கேட்கப்பட்டிருந்தது.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. முந்தைய தேர்வுகளை விட இலகுவான கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டு இருந்தது, என்றனர்.

கோ-ஆப்பரேட்டிவ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பதவிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூரில் 19 தேர்வு மையங்களில் 5,954 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். வழக்கத்தை விட அதிக அளவிலான நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

குறிப்பாக 2018 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 3,436 பேர் தேர்வு எழுத இன்று வரவில்லை. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 42.23 % சதவிகிதம் மட்டுமே தேர்வு எழுதினர், மீதமுள்ள 57.77 % தேர்வு எழுத வரவில்லை. கடந்த காலங்களைவிட இந்த ஆப்சென்ட் விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...