இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின் புதிய கிளை கோவைப்புதூரில் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. இதனை கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வங்கியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய அரசின் யுனைட்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி பவன் பஜாஜ் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்; இந்திய அரசின் யுனைட்டேட் வங்கி பெரும்பாலனவை கிழக்கு பகுதியில் தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தூர், ஆக்ரா மற்றும் லூதியான போன்ற நகரங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் தெற்கு பகுதிகளில் பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் புதிய மூன்று கிளைகள் திறக்கப்பட உள்ளது. இந்த வருடம் மட்டும் இந்தியா முழுவதிலும் 51 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது. அதில் 25 சதவீதம் கிளைகள் கிராமப்புறங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணமதிப்பு இழப்பீட்டிற்கு பிறகு ரூபாய்.10 ஆயிரத்து 500 கோடி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில், வங்கியின் பொது துணைமேலாளர் இளங்கோ, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, வங்கியின் கிளை மேலாளர் அரவிந்த் சந்திரசேகர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.