நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் உதகையில் மனிதநேய வார விழா உற்சாக கொண்டாட்டம்

உதகை அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகையில் அருகேயுள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மனிதநேய வார விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக இன்று மனித நேய வார விழா கொண்டாடப்பட்டது.



காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சியில் உதகை நகர் டிஎஸ்பி யசோதா, உதகை ஊரக டிஎஸ்பி விஜயலட்சுமி, நஞ்சநாடு பஞ்சாயத்து தலைவர் சசிகலா, தோடர் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர், சிவக்குமார், அரசு வழக்கறிஞர் முகமது மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...