உடுமலையில் வேளாண் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் இன்றும் தொடங்கும் வேளாண் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்ட விவசாயிகள்.



திருப்பூர்: உடுமலையில் இன்று தொடங்கிய வேளாண் கண்காட்சியில் விவசாயம் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் அணை நீர், மற்றும் கிணறு பாசனத்தை நம்பி பல்வேறு விவசாய சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக சுற்றுப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் உடுமலையில் உள்ள தேஜஸ் மகாலில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி இன்று முதல் வருகிற 30ஆம் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.



கண்காட்சியில், வேளாண்துறை, பட்டு வளர்ச்சி துறை, தோட்டக்கலை துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் நவீன வேளாண்மை கருவிகள், மருத்து தெளிக்கும் கருவி, தேங்காய் பறிக்கும் கருவி, டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூள் தூளாக்கும் கருவி, மாட்டுத் தீவன எந்திரம், மரச்செக்கு எண்ணெய், புதிய தொழில் நுட்பத்தில் தேங்காய் உரிக்கும் நவீனஎந்திரம் என்று பல்வேறு கருவிகள் இடம் பெற்றன.



நர்சரி பண்ணை, புல்பிடுங்கும் எந்திரம், தோட்டக்கலை சம்பந்தமான செடிகள், நர்சரிகள் மற்றும் கால்நடை சம்பந்த மான கருவிகள், மல்பெரி சம்பந்தமான அரங்குகள் உள்பட பல்வேறு அரங்குகள் அரசு மற்றும் தனியார் துறை மூலம் இடம் பெற்றுள்ளன.

கோவை, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் விவசாய கண்காட்சி உடுமலையில் நடைபெறுவதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்காட்சியைக் கண்டுகளித்து தங்களுக்கு வேண்டிய விவசாய பொருள்களை வாங்கிச் சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...