உடுமலையில் வேளாண் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் இன்றும் தொடங்கும் வேளாண் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்ட விவசாயிகள்.



திருப்பூர்: உடுமலையில் இன்று தொடங்கிய வேளாண் கண்காட்சியில் விவசாயம் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் அணை நீர், மற்றும் கிணறு பாசனத்தை நம்பி பல்வேறு விவசாய சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக சுற்றுப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் உடுமலையில் உள்ள தேஜஸ் மகாலில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி இன்று முதல் வருகிற 30ஆம் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.



கண்காட்சியில், வேளாண்துறை, பட்டு வளர்ச்சி துறை, தோட்டக்கலை துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் நவீன வேளாண்மை கருவிகள், மருத்து தெளிக்கும் கருவி, தேங்காய் பறிக்கும் கருவி, டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூள் தூளாக்கும் கருவி, மாட்டுத் தீவன எந்திரம், மரச்செக்கு எண்ணெய், புதிய தொழில் நுட்பத்தில் தேங்காய் உரிக்கும் நவீனஎந்திரம் என்று பல்வேறு கருவிகள் இடம் பெற்றன.



நர்சரி பண்ணை, புல்பிடுங்கும் எந்திரம், தோட்டக்கலை சம்பந்தமான செடிகள், நர்சரிகள் மற்றும் கால்நடை சம்பந்த மான கருவிகள், மல்பெரி சம்பந்தமான அரங்குகள் உள்பட பல்வேறு அரங்குகள் அரசு மற்றும் தனியார் துறை மூலம் இடம் பெற்றுள்ளன.

கோவை, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் விவசாய கண்காட்சி உடுமலையில் நடைபெறுவதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்காட்சியைக் கண்டுகளித்து தங்களுக்கு வேண்டிய விவசாய பொருள்களை வாங்கிச் சென்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...