உடுமலையில் வேளாண் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் இன்றும் தொடங்கும் வேளாண் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்ட விவசாயிகள்.



திருப்பூர்: உடுமலையில் இன்று தொடங்கிய வேளாண் கண்காட்சியில் விவசாயம் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் அணை நீர், மற்றும் கிணறு பாசனத்தை நம்பி பல்வேறு விவசாய சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக சுற்றுப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் உடுமலையில் உள்ள தேஜஸ் மகாலில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி இன்று முதல் வருகிற 30ஆம் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.



கண்காட்சியில், வேளாண்துறை, பட்டு வளர்ச்சி துறை, தோட்டக்கலை துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் நவீன வேளாண்மை கருவிகள், மருத்து தெளிக்கும் கருவி, தேங்காய் பறிக்கும் கருவி, டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூள் தூளாக்கும் கருவி, மாட்டுத் தீவன எந்திரம், மரச்செக்கு எண்ணெய், புதிய தொழில் நுட்பத்தில் தேங்காய் உரிக்கும் நவீனஎந்திரம் என்று பல்வேறு கருவிகள் இடம் பெற்றன.



நர்சரி பண்ணை, புல்பிடுங்கும் எந்திரம், தோட்டக்கலை சம்பந்தமான செடிகள், நர்சரிகள் மற்றும் கால்நடை சம்பந்த மான கருவிகள், மல்பெரி சம்பந்தமான அரங்குகள் உள்பட பல்வேறு அரங்குகள் அரசு மற்றும் தனியார் துறை மூலம் இடம் பெற்றுள்ளன.

கோவை, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் விவசாய கண்காட்சி உடுமலையில் நடைபெறுவதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்காட்சியைக் கண்டுகளித்து தங்களுக்கு வேண்டிய விவசாய பொருள்களை வாங்கிச் சென்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...