திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தின் சார்பில் சிறுவர்களுக்கான 50 புத்தகங்களை மாணவ, மாணவிகள் வெளியிட்டனர்.
திருப்பூர்: புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ் சார்பாக 19ஆவது புத்தகத் திருவிழா, காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்வான இன்று பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது.
இதில் திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 50 புத்தகங்களை 50 மாணவ, மாணவிகள் வெளியிட அதனை 50 மாணவ, மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.
புத்தகங்களை வெளியிட்ட மாணவர்கள், புத்தகங்களை ஏற்கனவே படித்து புத்தகத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினர். இதில் மாணவ,மாணவிகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சியும் நடைபெற்றது.