பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜை: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு

கோவை பொள்ளாச்சியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று வழிபாடு.


கோவை: தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளன.



இந்நிலையில், மாணவ, மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டியும், ஞாபகத்திறன் அதிகரித்து சிறந்த முறையில் தேர்வு எழுதி எல்.கே.ஜி முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என வேண்டியும் பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



இதில், மாணவ-மாணவிகள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்து ஹயக்ரீவர் மந்திரங்களை கூட்டாக படித்தனர்.



இந்த சிறப்பு வழிபாட்டில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...