தமிழக-வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்போக்கு: சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினரே காரணம் - காடேஸ்வரா சுப்ரமணியம்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டினரே வடமாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் இடையே மோதல் போக்கை உருவாக்குவதாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த யூனியன் மில் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இந்த பொதுக்குழு கூட்டத்தில் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு உள்ள குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசியதாவது,



திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பங்களாதேஷ் உள்ளிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் அமைதியை சீர்குலைக்க வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் மாநில தொழிலாளர்களுக்கு இடையே மோதல் போன்ற போக்கை உருவாக்கி வருகின்றனர்.

உடனடியாக காவல்துறையும் உளவுத்துறையும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் மூலம் பயனடைவதன் காரணமாகவே அந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்து வருகிறார். பழனி கோவிலில் ஆகம விதிகளின் படி கும்பாபிஷேக விழா நடத்தப்படாததன் காரணமாக தமிழக அரசுக்கு கெட்ட காலம் துவங்கி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.



Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...