கோவை வால்பாறை அருகே யானை பார்த்து பயந்து ஓடிய வடமாநில பெண் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் வடமாநில பெண் ஒருவர் விறகு எடுக்கச் சென்ற நிலையில் யானையைப் பார்த்து பயந்து ஓடிய போது கிழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் யானை பார்த்து தடுமாறியதில் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மதியம் 12 மணியளவில் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பெண்கள் விறகு எடுக்கச் சென்று உள்ளனர்.

அப்போது வனப்பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நின்று உள்ளது. யானையைப் பார்த்த அவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி வந்து உள்ளனர். இதில் லில்மானிகிஷ்கு என்பவர் கீழே விழுந்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சக பெண்கள் அவரை காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

உடலில் காயங்கள் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...