கோவை காரமடையில் கஞ்சா கடத்தல் - பெண் உட்பட மூன்று பேர் கைது

காரமடை அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது.


கோவை: காரமடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் காரமடை நகராட்சி அலுவலகம் முன்புள்ள பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நடமாடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், அவர்கள் சேலம் வரடேரிகாடு பகுதியை சேர்ந்த சாந்தி(35), ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கோஷடி மரிநியா(28), சதீஸ்காகாரா என்பதும், மூவரும் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக காரமடை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...