திருப்பூர் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 54 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.


திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 54 வகையானஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள்கணக்கிடப்பட்டது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பானது, ஏரிகள் மற்றும் குளங்களில் இன்று நடைபெற்றது.

இதன் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட 20 குளங்களில் (என். மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராய குளம், தேன் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் டேம் போன்ற குளங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.



இதில் வனத்துறை பணியாளர்கள் தன்னார்வு தொண்டு நிறுவனர் ரவீந்திரன் தலைமையிலான குழுவும் மற்றும் ஆர்ஜிஎம் பள்ளி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அனைவருக்கும் பயிற்சி மற்றும் கணக்கெடுப்பிற்குத் தேவையான தரவு புத்தகம் போன்றவை வழங்கப்பட்டது.



நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள உள்ள புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை இதில் கணக்கிடப்பட்டது.



உடுமலைப்பேட்டை பெரிய குளத்தில் கணேஷ் ராம், உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர், சிவக்குமார் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் மகேஷ் குமார், உயிரியலாளர், நரசிம்மன், வேட்டை தடுப்பு காவலர், கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன், RGM பள்ளி மாணவர்கள் பங்கேற்று சுமார் 54 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் கணக்கிடப்பட்டது.



அதில் நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பாம்பு தாரா, நீர் கக்கா, சாம்பல் நாரை, செந்நீல நாரை, நீல தாலை கோழி, நாம கோழி, தாமரை கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான், வெள்ளை அரிவாள் மூக்கன், நீல வால் கீச்சன், தவிட்டு குருவி, செம் பருந்து, செண்பகம், மஞ்சள் வாலட்டி, மைனா, பச்சை கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டு குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால் காக்கை, சின்ன கீழ் க்கைக் சிறகி, சூரமாறி, பொறி மண் கொத்தி, பொறி வல்லூறு, குள்ளத் தாரா போன்ற பலவிதமான பறவைகள் கணக்கிடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...