கோவை கணபதியில் போக்குவரத்து மாற்றம் - மாநகர போலீசார் அறிவிப்பு!

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பை கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.



கோவை: கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து சங்கனூர் சாலைக்கு தமிழ்நாடு பேருந்து நிறுத்தம் (கண்ணன் பல்பொருள் அங்காடி) வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறமாகத் திரும்பி, டெக்ஸ்டூல் பாலத்தின் பயன்பாட்டுச் சாலையில் நுழைந்து‘யு’டர்ன் எடுத்து பயணத்தைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து தமிழ்நாடு பேருந்து நிலையம் வழியாக காந்திபுரம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் பகுதியில் ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கத்திலுமே இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...