கோவை கணபதியில் போக்குவரத்து மாற்றம் - மாநகர போலீசார் அறிவிப்பு!

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பை கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.



கோவை: கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து சங்கனூர் சாலைக்கு தமிழ்நாடு பேருந்து நிறுத்தம் (கண்ணன் பல்பொருள் அங்காடி) வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறமாகத் திரும்பி, டெக்ஸ்டூல் பாலத்தின் பயன்பாட்டுச் சாலையில் நுழைந்து‘யு’டர்ன் எடுத்து பயணத்தைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து தமிழ்நாடு பேருந்து நிலையம் வழியாக காந்திபுரம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் பகுதியில் ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கத்திலுமே இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...