உடுமலையில் புதுப்பிக்கப்பட்ட 120 ஆண்டு பழமையான பள்ளிவாசல் திறப்பு - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டது. இந்த விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் முதல் மற்றும் இரண்டாம் நகர மன்றத்தலைவர் ராவ் பகதூர் சையது திவான் அப்துல் ரசாக் மற்றும் கான் பகதூர் ஜனாப் சையது திவான் மொகிதீன் சாகிப் பாட்சா ஆகியோர், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 1917 முதல் 1928 வரை நகர மன்றத் தலைவர்களாக இருந்து மக்களாட்சி நடைபெற்றது.



மேலும், சோழிய கவுண்டர் இறப்பின்போது ஒவ்வொரு பள்ளி வாசலிலும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தப்பள்ளிவாசலிலும் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டதாக உடுமலை வரலாற்று நூல் தெரிவிக்கிறது.



வரலாற்று சிறப்பும் சமூக ஒற்றுமையும் நிறைந்த பாரம்பரிய மிக்க 120 ஆண்டு கால ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் புதுப்பிக்கபட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான ஜாமியா மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழக முதல்வர் சார்பிலும் எனது தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்சி அரபி கல்லூரி அன்வாலூர் உழும் அரபிக் கல்லூரி முதல்வர் ரூ ஸுல் ஹக், முன்னாள் அமைச்சர் உடுமலைக்கு ராதாகிருஷ்ணன் , நகர திமுக செயலாளர் சி வேலுச்சாமி , அதிமுக நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில், சுமார் 3000 பேருக்கு அறுசுவை பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...