அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு -சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும், ஒ.பன்னீர்செல்வம் முதல்வாரக தொடர வேண்டுமென்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டுமென்ற தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு இப்படி தான் வர வேண்டுமென மக்கள் விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக உடையக்கூடாது என்பதற்காக தான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் போது ஆதரவு அளித்ததாகவும், ஆனால் அன்றைய நிலை இன்று இல்லை எனவும் கூறிய அவர், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருவார்கள் எனவும், கட்சி உடையக்கூடாது என விரும்பினால் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். சசிகலாவிற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்த போது முன்கூட்டியே எடப்பாடி பழனிச்சாமியை ஏன் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஒ.பன்னீர்செல்வத்தை தவிர வேறு யாரையும் முதல்வராக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...