திருப்பூரில் தமிழக - வடமாநில தொழிலாளர்கள் மோதல் சம்பவம் - பீகார் இளைஞர்கள் 2 பேர் கைது

திருப்பூரில் தமிழக வடமாநில தொழிலாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் கடந்த 26 ஆம் தேதி தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் ஒரு வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோ முற்றிலும் வதந்தி எனவும், தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் எனவும், அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் தவறாகப் பதிவிடுவோர் மீதும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருப்பூர் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்காக இரண்டு தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம்(27) என 2 பேரை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148(ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294(பி)- பொது இடத்தில் அவதூறாகப் பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...