கோவையில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு!

கோவை சின்னவேடம்பட்டியில் குடும்பத் தகராறில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவையில் குடிபோதையில் மாமியாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மலர்விழி (48). இவரது மகளை நாகராஜ் என்பவர் திருமணம் செய்துள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

மருமகன் நாகராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ் மீண்டும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை மாமியார் மலர்விழி தட்டிக்கேட்டதால், அவருக்கும் நாகராஜ்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மலர்விழியை நாகராஜ் கடுமையாக தாக்கி அவதூறாக பேசியதோடு வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார். மீண்டும் அவரை கொடூரமாக தாக்கியதில் பலத்த ரத்த காயத்துடன் மலர்விழி மயங்கினார்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் மலர்விழி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் மருமகன் நாகராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...