மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வாகனங்களால் வனவிலங்குகள் விபத்தில் உயிரிழப்பதை தவிர்க்க 5 இடங்களில் வனத்துறையினர் வேகத்தடை அமைப்பு.



கோவை: மேட்டுப்பாளையம் - உதகை வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தினை கடந்து இரண்டு வனச்சாலைகளின் வழியே பயணித்து தான் நீலகிரி மாவட்டம் செல்லமுடியும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் சாலை ஆகிய இரண்டு வன சாலைகள் உள்ள நிலையில் இந்த சாலைகளில் அடிக்கடி வன உயிரினங்களான காட்டுயானை, மான், சிறுத்தை, காட்டு எருமை, குரங்கு உள்ளிட்ட பல வன சாலைகளை கடந்து வனப்பகுதிக்கு செல்ல முடியும்.

அப்படி சாலையை கடக்கும் போது வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகளவில் நடக்கிறது.



குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்கவும், மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 5 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் ஓடந்துரை பகுதியில் இருந்து தூரிப்பாலம் வரை சுமார் 5 இடங்களில் வேகத்தடைகளை அமைந்துள்ள வனத்துறையினர் மேற்கொண்டு வனச்சாலையில் அதிவேகமாக வந்து வன உயிரினங்களின் மீது விபத்தை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...