தாராபுரத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

தாராபுரத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.



திருப்பூர்: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன் வைக்கப்பட்ட காந்தியின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மரியாதை செலுத்தினார்.



அதன் பிறகு அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள உள்ள அறைகள் மற்றும் ஒவ்வொரு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் அலுவலக பணியாளர் உடன் இருந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...