தாராபுரத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

தாராபுரத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.



திருப்பூர்: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன் வைக்கப்பட்ட காந்தியின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மரியாதை செலுத்தினார்.



அதன் பிறகு அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள உள்ள அறைகள் மற்றும் ஒவ்வொரு அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், வட்டாட்சியர் ஜெகஜோதி மற்றும் அலுவலக பணியாளர் உடன் இருந்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...