பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு - தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்!

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு நாளை முன்னிட்டு தாராபுரத்தில் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.

இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

3 ஆயிரத்து 3500 கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது.



ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு நாளை ஒட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில், சர்ச் சாலையில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பாதை யாத்திரையாக வந்து பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலையை வந்து அடைந்தனர்.



அங்கு அண்ணல் காந்தியடிகளாரின் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மூன்று நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு காங்கிரஸ் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



அதன் பிறகு மாவட்ட தலைவர் தென்னரசு கூறுகையில், 3,500 கிலோ மீட்டரை 136 நாட்கள் கடந்த இளம் தலைவர் ராகுல்காந்தி. பாரத் ஜோடோ யாத்திரை இன்று நிறைவு செய்துள்ளார். இது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்திய ஒற்றுமையை உணர்த்துகிறது எனத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...