உடுமலை அருகே வாகனம் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பலி!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள், உடுமலையிலிருந்து பழனியை நோக்கி அதிகாலை 3 மணி அளவில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, மடத்துக்குளம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நரசிங்கபுரம் மேடு பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாத யாத்திரை சென்றவர்கள் மீது மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.



இந்த விபத்தில் நிர்மலா (52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், செல்வராணி (40)என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...