உடுமலை அருகே வாகனம் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பலி!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள், உடுமலையிலிருந்து பழனியை நோக்கி அதிகாலை 3 மணி அளவில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, மடத்துக்குளம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நரசிங்கபுரம் மேடு பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாத யாத்திரை சென்றவர்கள் மீது மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.



இந்த விபத்தில் நிர்மலா (52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், செல்வராணி (40)என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...