கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜகவினர் கைது

கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பத்தில் பலியானவர்களுக்கு ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆர்.எஸ் புரம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் வலியுறுத்தினார். மேலும் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைவழக்கில் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாமல் காலதாமதம் செய்வது வெட்கக்கேடு எனவும், தமிழக அரசியலில் உள்ளவர்கள் ஆவியை பார்த்து பயப்படுவது போல காவியை பார்த்து பயப்படுவதாகவும் கூறிய அவர், வருங்காலங்களில் தமிழகத்தில் காவி கொடி பறந்தேதீருமெனவும் தெரிவித்தார். இதையடுத்து தடையை மீறி அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...