நீலகிரியில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உட்பட இருவர் கைது..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீஜித். அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்.

இந்நிலையில், இவர்களிடம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராமப்புற குடிசை மாற்று வீடு கட்டுவதற்காக கதவு எண் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், கதவு எண் வழங்காமல் தாமதித்து வந்ததுடன், அதற்காக 11,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென ஸ்ரீஜித் கேட்டதாக கூறப்படுகிறது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் கலந்த 11,000 ரூபாயை கொடுத்து ஸ்ரீஜித்தின் உதவியாளர் ரமேஷிடம் கொடுக்க வைத்துள்ளனர்.



இந்நிலையில், ரமேஷ் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...