ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பார்வர்டு பிளாக் ஆதரவு! - தேசிய துணைத்தலைவர் கதிரவன் தகவல்

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார் என பார்வர்டு பிளாக் தேசிய துணைத்தலைவர் கதிரவன் குற்றச்சாட்டு.



திருப்பூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பிரச்சாரம் செய்யும் என அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மன்னரைப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 8ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் கதிரவன் கூறியுள்ளதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வருகின்ற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நிச்சயம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார். தமிழக பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இம்முயற்சியை மேற்கொள்ளும்.

இவ்வாறு, கதிரவன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...