உடுமலை அருகே சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பம் - அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மாற்ற கோரிக்கை

உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்துள்ள மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை-தாராபுரம் சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தில் கான்கிரீட் உடைந்தும், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், எப்போது விழுமோ என்ற அச்சத்துடனேயே பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்லும் சூழல் நிலவி வருகிறது.



அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் பொது மக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...