உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால திறன் பயிற்சி

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், குறுகிய கால திறன் பயிற்சி பெற விரும்புவோர், திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.


திருப்பூர்: உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், தமிழக அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறுகிய கால திறன் பயிற்சி அளிக்கும் மையமாகப் படச் செயல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரீசியன் டொமஸ் சொல்யூசன்ஸ், தொழிற்பிரிவு, 100 நாட்கள், 400 மணி நேரம் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

இதில் சேர, 8, 10ஆம் வகுப்பு அல்லது ஒரு ஆண்டு முன் அனுபவம் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், 18 முதல் 45 வயது வரை உள்ள, ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

இலவச பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன், முன்னணி நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன், உடனடி வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேருபவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் போக்குவரத்து படி வழங்கப்படும்.

பயிற்சி பெற விரும்புவோர், உடுமலை எலையமுத்துார் சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம், என அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ராஜேஸ்வரி விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...