உடுமலை அருகே சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தொழிலாளர்கள் ஊர்வலம்

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, உடுமலை வரதராஜபுரம் சுகுணா புட்ஸ் தீவன ஆலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி.



திருப்பூர்: உடுமலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊர்வலம் நடந்தது.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு உடுமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், குடிமங்கலம் எஸ்.ஐ ஆனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தீவன ஆலை மேலாளர் குணசேகரன் வரவேற்பு அளித்தார்.

இதில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம், குடிமங்கலம், நால்ரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தது. தீவன ஆலை தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...