பல்லடம் கேத்தனூரில் மாரியம்மன், காசி விஸ்வநாதர் கோயில்கள் குடமுழுக்கு விழா - பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இரண்டு திருக்கோவில்களும் 36 வருடங்களுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.



கடந்த 30 ஆம் தேதி விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமத்தோடு விழா தொடங்கி, யாகங்கள் நடத்தப்பட்டு, கலசாபிஷேகம், விநாயகர் பூஜை மற்றும் நேற்று திருமுறை பாராயணம், பூதசுத்தி புண்யாகம், யாகபூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.



இன்று காலை வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரின் மூலவர் சிலைகளுக்கும் கோவிலின் கோபுர கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவினை நடத்தி வைத்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், அடுத்த 48 நாட்களுக்கு வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதருக்கு மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...