திருப்பூர் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் விரைவில் மின்உற்பத்தி - மாநகராட்சி மேயர் பேச்சு!

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் விரைவில் மின்சாரம் தயாரிக்கப்படும் என கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடந்தது. இதற்கு காரணமாக இருந்த மேயர் மற்றும் ஆணையர், அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகமே திருப்பூரில் நடந்த பொங்கல் திருவிழாவை திரும்பி பார்த்துள்ளது.

மேலும், பதவி உயர்வுபெற்று கலெக்டராக பொறுப்பேற்க உள்ள மாநகராட்சி கமிஷனருக்கு பாராட்டுகள். சென்னை பெருநகர்மன்ற கூட்டத்தில் ம.தி.மு.க. கவுன்சிலர், மாமன்ற கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் பேரில், அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் திருப்பூர் மாமன்ற கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், 4-வது குடிநீர் திட்ட பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததும் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்காது. 13 குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் மாநகராட்சி வடக்கு பகுதிகளில் முதற்கட்டமாக நீரேற்ற திட்டமிடப்பட்டது. இதில், 3 நீர்தேக்க தொட்டிகளில் நீரேற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மாநகராட்சியில் 1-4-2018 அன்று முதல் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்தாத தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பூ மார்க்கெட் பகுதிகளில் காலியாக உள்ள இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கலாம் என பலரும் தெரிவித்தனர்.

ஆனால், அந்த பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும். அதனை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தலாம். மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகளை திறம்பட செய்து வருகிறோம். இதில், திடக்கழிவு மேலாண்மை மூலம் நுண்ணுயிர் தயாரித்து வருகிறோம். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...