திருப்பூர் ஓடக்காடு பகுதியில் அதிகாலையில் பைக் திருட்டு - வீடியோ வைரல்

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் அதிகாலையில் வாலிபர்கள் பைக் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் வாலிபர்கள் பைக் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பூர் ஓடக்காடு, காலேஜ் ரோடு 7ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தனது பைக்கினை வீட்டு முன் நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது.



இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை 3 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சாவகாசமாக வெங்கட்டின் பைக்கினையும், பக்கத்து வீட்டினை சேர்ந்த இன்னொருவரின் பைக்கையும், சைடு லாக்கினை உடைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

பைக் திருட வந்த இருவரும் சொந்த வாகனத்தை எடுத்துச் செல்வது போல ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்குப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே இடத்தில் இரண்டு பைக்குக்களை திருடிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாநகரில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களைத் திருடிச்செல்லும் சம்பவங்களும், அந்த வாகனங்கள் மூலம் வழிப்பறி, திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் அப்பாவி வாகன உரிமையாளர்கள் பெரும் சிக்கலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

திருப்பூர் போலீசார் முழுமையாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகன திருட்டுகளைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...