மேட்டுப்பாளையம் அருகே புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு - மண்ணெண்ணெய் கேனுடன் பாஜகவினர் தர்ணா!

மேட்டுப்பாளையம் அடுத்த எத்தப்பன் நகரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே புதிய கல்குவாரி அமைக்க தடை விதிக்க கோரி காரமடை நகராட்சி அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் பாஜகவினர் தர்ணா போராட்டம்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன்நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள கரியமலை பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கரியமலை பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நபர்கள் துவங்கி உள்ளதாக தெரிகிறது.

இந்த கல்குவாரி அமைக்கபட்டால் குடியிருப்புகள் சேதம் அடையும் என்றும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக அந்த கல்குவாரி அமைய நகராட்சி அனுமதிக்க கூடாது எனக்கூறி பாஜகவினர் காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட பாஜகவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் ராகவன் தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.



இதையடுத்து அங்கு வந்த காரமடை போலீசார், பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...