கோவையில் வீட்டின் முன்பு நிறுத்திய இருசக்கர வாகனம் மாயம் - போலீசார் விசாரணை

துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்திருந்த இருசக்கர வாகனம் மாயமான புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வடமதுரை வி.எஸ்.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டியோ இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து பெரியசாமி துடியலூர் காவல் நிலையத்தில் தனது டியோ இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...