மத்திய பட்ஜெட் ஏமாற்றம் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்

மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையை ஊக்குவிக்கும் அளவிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை, பின்னலாடை துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்.



திருப்பூர்: மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து திருப்பூர் தொழில்துறையினர் காத்திருந்ததாகவும் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னலாடை துறையினருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிகக் குறைந்த அளவு. இதனால் எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும், மூலப்பொருள் விலையை நிலையாக வைக்கப் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம்.

இதேபோல் வங்கி கடன்‌ உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மேலும் பஞ்சு ஏற்றுமதி தடை தொடர்பாகவோ, பஞ்சு இறக்குமதி வரி தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை என்றும், நூல் விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு இல்லை என்பதும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பல வருட கோரிக்கையான பின்னலாடை துறைக்குத் தனி வாரியம் தேவை என்பதும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், பின்னலாடைக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இல்லை, தொழில் நகரத்தின் முக்கிய கோரிக்கையான தொழிலாளர்கள் குடியிருப்புகள் தொடர்பாக அறிவிப்பு, நிட்வேர் போர்டு அறிவிப்பு போன்றவைகளையும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் பின்னலாடை துறைக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என்றார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...