தாராபுரத்தில் டெம்போ டிராவலர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனம், டெம்போ டிராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு. பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அலங்கியம் சாலையில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாகனம் இண்டிகேட்டர் போடாமல் திடீரென சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியது. இதனால், அந்த வழியாக வந்து கொண்டிருந்த தனியார் டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், தனியார் ட்ராவலர் வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. இரு ஓட்டுனர்கள் இடையே சாலையின் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் கரூரிலிருந்து பேருந்து நிலையம் செல்லவிருந்த அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தினர்.



இதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...