கோவையில் கேரள லாட்டரி விற்பனை - இருவர் கைது, மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை செய்துவந்த 2 பேரை கைது செய்த போலீசார், ரூ.6.50 லட்சம் பணம், 5 செல்போன்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் தலைமையிலான காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த வினோத்குமார் மற்றும் அருண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள், 60 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பாலன், பிரதீப், பிரபு உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...