ஓம் நமச்சிவாயா என்பது அதற்கென்று உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும், ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று திருப்பூரில் நடந்த விழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினத்தில் 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா, ஸ்ரீ ரத்ன விஜயாம்பிகை ஆலய மகா கும்பாபிஷேக விழா, ஆன்மார்த்தசுவாமி கருவறை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழாவின் முதலாவதாக இன்று 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்த குருபூஜை விழாவில் ஸ்ரீமாணிக்கவாசக பெருமானுக்கு சர்க்கர அபிஷேகமும், தேவார இன்னிசையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

மங்கள இசை, கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் ரத உற்சவ திருவீதி உலா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மகாயாகமும், பராயண வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அருட் பணி சித்தர் விருது, சிவாச்சாரிய திலகம், சைவநெறி செஞ்சுடர், சிவாச்சாரிய திலகம் என 12 திருவண்பர்களுக்கு ஞான விருதுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம், முழு பலனையும் தரவல்லது ஹம் நமச்சிவாயா என்பது அதுக்குன்னு உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும். ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.
இந்த குருபூஜை விழாவில் ஸ்ரீமாணிக்கவாசக பெருமானுக்கு சர்க்கர அபிஷேகமும், தேவார இன்னிசையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
மங்கள இசை, கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் ரத உற்சவ திருவீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகாயாகமும், பராயண வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அருட் பணி சித்தர் விருது, சிவாச்சாரிய திலகம், சைவநெறி செஞ்சுடர், சிவாச்சாரிய திலகம் என 12 திருவண்பர்களுக்கு ஞான விருதுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம், முழு பலனையும் தரவல்லது ஹம் நமச்சிவாயா என்பது அதுக்குன்னு உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும். ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.