'ஓம் நமச்சிவாயா என்பதை அனைவரும் சொல்லலாம்..!' - கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தகவல்

ஓம் நமச்சிவாயா என்பது அதற்கென்று உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும், ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று திருப்பூரில் நடந்த விழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினத்தில் 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா, ஸ்ரீ ரத்ன விஜயாம்பிகை ஆலய மகா கும்பாபிஷேக விழா, ஆன்மார்த்தசுவாமி கருவறை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழாவின் முதலாவதாக இன்று 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த குருபூஜை விழாவில் ஸ்ரீமாணிக்கவாசக பெருமானுக்கு சர்க்கர அபிஷேகமும், தேவார இன்னிசையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.



மங்கள இசை, கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் ரத உற்சவ திருவீதி உலா நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து மகாயாகமும், பராயண வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அருட் பணி சித்தர் விருது, சிவாச்சாரிய திலகம், சைவநெறி செஞ்சுடர், சிவாச்சாரிய திலகம் என 12 திருவண்பர்களுக்கு ஞான விருதுகள் வழங்கப்பட்டது.



முன்னதாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம், முழு பலனையும் தரவல்லது ஹம் நமச்சிவாயா என்பது அதுக்குன்னு உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும். ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...