உடுமலையில் பேருந்து படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் - காவல்துறை கவனிக்குமா?

உடுமலையிலிருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து படிகளிலேயே பயணம் செய்வதால் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.


திருப்பூர்: உடுமலையில் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் படிகளிலேயே பயணம் செய்து வருவதால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல வெளியூர்களுக்குச் சென்று படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேருந்துகள் மூலமே பயணம் செய்கின்றனர்.



இதனால் தினசரி காலை வேளையில் உடுமலை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இங்கிருந்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்துகள், காலியாக செல்லும் நேரங்களிலும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டு வரை தொங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இம்மாணவர்களை போலீசார் பலமுறை கண்டித்தும் அவர்கள் அதனை அலட்சியம் செய்கின்றனர். மாணவர்கள் என்பதால் போலீசார் ஒரு எல்லைக்கு மேல் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீதும், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து நிர்வாகம் மீதும் போலீசாரும், போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...