திமுக இளைஞர் அணியின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவை பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பினை 27.09.2014 அன்றே வெளியிட்ட பெங்களுர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜல்லிகட்டிற்காக போராடிய இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கும், விவசாயிகள் மரணத்தில் ஆளும்கட்சியின் அலட்சியப்போக்கிற்கும், பவானி, பாம்பாறு ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை தடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும், நீட் தேர்விற்கு விலக்களிக்க உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வலியுறுத்தல், உதய் மின் திட்டத்தால் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ரத்தாக கூடாது என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலினிடம், அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மற்ற கட்சிகளில் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது என தெரிவித்த அவர், திமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக வெளியான தகவலையும் மறுத்தார்.
இதில் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பினை 27.09.2014 அன்றே வெளியிட்ட பெங்களுர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜல்லிகட்டிற்காக போராடிய இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கும், விவசாயிகள் மரணத்தில் ஆளும்கட்சியின் அலட்சியப்போக்கிற்கும், பவானி, பாம்பாறு ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை தடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும், நீட் தேர்விற்கு விலக்களிக்க உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வலியுறுத்தல், உதய் மின் திட்டத்தால் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ரத்தாக கூடாது என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலினிடம், அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மற்ற கட்சிகளில் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது என தெரிவித்த அவர், திமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக வெளியான தகவலையும் மறுத்தார்.