அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஊழல் புகார் - 70 பக்க ஆவணங்கள் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அளித்த ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் மீண்டும் 70 பக்க ஆவணங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வதில் ஊழல் செய்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோதும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதில், உடுமலை ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது எத்தனை திட்டங்கள் கையெழுத்தானது, முடிக்கப்பட்டதாக கூறிய பணிகள் நிறைவடையாமல் உள்ள புகைப்படங்களுடன் ஆவணங்களை அளித்துள்ளதாக கூறிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், முன்னாள் அமைச்சர் மீதான தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...